என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில்   மைனர் பெண்ணை திருமணம்   செய்த தருமபுரி வாலிபர் மீது வழக்கு
    X

    ஓசூரில் மைனர் பெண்ணை திருமணம் செய்த தருமபுரி வாலிபர் மீது வழக்கு

    • கோவிலில் வைத்து அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.
    • கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார்.

    ஓசூர்,

    தர்மபுரி மாவட்டம் தலவாஹள்ளியை சேர்ந்தவர் வல்லரசு (22). இவர், ஓசூர் பாரதியார்நகர் பகுதியை சேர்ந்த 17 வயது உறவுக்கார பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தார்.

    இந்த நிலையில், கடந்த 10-ந்தேதி, பாரதியார்நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து அந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

    இது சம்பந்தமாக, மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்ததன்பேரில், போலீசார் வல்லரசு மீது வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×