என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் ராகுல் காந்தியை விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டம்
- ராஜீவ் காந்தியை விசாரிக்க காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
- ஓசூர், கிருஷ்ணகிரியில் போராட்டம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தலைமை தபால் நிலையம் எதிரில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் நடராஜன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் வக்கீல் காசிலிங்கம், நாஞ்சில் ஜேசுதுரை, அக.கிருஷ்ணமூர்த்தி, நாராயணமூர்த்தி, மாவட்ட துணைத் தலைவர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் லலித்ஆண்டனி வரவேற்றார்.
இதில் பழி வாங்கும் நடவடிக்கையாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியிடம் அமலாக்க துறை விசாரணை நடத்துவதை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊத்தங்கரை முன்னாள் தலைவர் ஆறுமுகம், எஸ்.சி, எஸ்.டி பிரிவு மாநில நிர்வாகி ஆறுமுகசுப்பிரமணி, நகர்மன்ற உறுப்பினர் விநாயகம், மாவட்ட துணைத் தலைவர் ரகமத்துல்லா, முன்னாள் நகர தலைவர் வின்செண்ட், விவசாய அணி தலைவர் சூர்யகணேஷ், மாவட்ட பொதுச் செயலாளர் அப்சல், குட்டி என்கிற விஜயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






