என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில்   கஞ்சா கடத்தியவர் கைது
    X

    ஓசூரில் கஞ்சா கடத்தியவர் கைது

    • பெங்களூருவில் இருந்து ஓசூருக்கு பஸ்சில் வந்த போது சிக்கியுள்ளார்.
    • டிராவல்ஸ் பையில், 10 கிலோ கஞ்சா இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது.

    ஓசூர்,

    பெங்களூரிலிருந்து ஓசூர் வழியாக கஞ்சா கடத்தி வரப்படுவதாக நேற்று சிப்காட் போலீசாருக்கு, ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஜுஜுவாடி செக்போஸ்ட் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட் ஈடு பட்டுருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த தனியார் பேருந்தில் போலீசார் சோதனையிட்டனர்.

    அப்போது, ஒரு பயணி வைத்திருந்த டிராவல்ஸ் பையில், 10 கிலோ கஞ்சா இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விசாரணையில் அவர், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே குட்டைமேடு பகுதியை சேர்ந்த அன்பு என்ற வெங்கடேசன் (40) என்பது தெரியவந்தது.

    போலீசார் அவரை கைது செய்து, ரூ.1 லட்சம் மதிப்பிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×