என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் பஸ் டெப்போ அதிகாரி மாயம்
- வேலைக்கு சென்ற இவர் மாலையில் வீடு திரும்பவில்லை.
- இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்துள்ள சூடுகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் ராஜண்ணா (வயது56). இவர் ஓசூர் அரசு போக்குவரத்து கழக பஸ் டெப்போவில் பொறுப்பு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வேலைக்கு சென்ற இவர் மாலையில் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான ராஜண்ணாவை தேடி வருகின்றனர்.
Next Story






