search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூரில்  அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டம்
    X

    ஓசூரில் அ.தி.மு.க. ஆலோசனைக்கூட்டம்

    • மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தும், உயர்த்தப்பட்ட விலைகளை திரும்பப்பெற வலியுறுத்தியும், அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்பாட்டம்.
    • கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    ஓசூர்,

    தமிழ் நாட்டில் சொத்துவரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தும், உயர்த்தப்பட்ட விலைகளை திரும்பப்பெற வலியுறுத்தியும், அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்களை, கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    அதன்படி, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ .தி.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது குறித்து நேற்று ஒசூரில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

    ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் மத்திகிரி கூட்டு ரோடில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமை தாங்கினார். மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், நகரமைப்பு குழுதலைவர் எம். அசோகா, மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தெற்கு பகுதி செயலாளர் பி.ஆர்.வாசுதேவன் வரவேற்றார். கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

    மேலும் இதில், மாவட்ட துணை செயலாளர் மதன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ஜே.எம். சீனிவாசன், இதில், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற தலைவர் சந்திரன், அமைப்புசாரா ஓட்டுனர் பிரிவு செயலாளர் சென்ன கேசவன், அரப்ஜான் உள்பட பலர் பேசினர். மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய நிர்வாகிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் கே. சாக்கப்பா, துணைத்தலைவர் கிருஷ்ணன் மற்றும் சார்பு அணிகளின் பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர்கள் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    Next Story
    ×