search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் சிப்காட் பகுதியில்   பெண் உள்பட 2 பேர் தற்கொலை
    X

    ஓசூர் சிப்காட் பகுதியில் பெண் உள்பட 2 பேர் தற்கொலை

    • சுசீலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • மனமுடைந்த கோபால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் அருகேயுள்ள காந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சுசிலா (வயது 37).டைலர் தொழில் செய்து வந்தார். கடந்த சில மாதங்களாக உடல் நல பதிப்பு ஏற்பட்டு பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    ஆனால் குணமாக வில்லை. இதில் மனமுடைந்த சுசீலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல ஒசூர் சிப்காட் பகுதியை சேர்ந்த கோபால் (28) என்ற விவசாயி குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் அவரது குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த கோபால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை மாரப்பன் தந்த புகாரின்பேரில் ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×