என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் புதிய உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம்
- 6 வார்டு நிர்வாகிகளிடம், உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து கேட்டறிந்தார்.
- இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, தெற்கு பகுதி செயலாளர் வாசுதேவன் செய்திருந்தார்.
ஒசூர்,
ஒசூர் மாநகர தெற்கு பகுதி அ.தி.மு.க சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டம் நேற்று மாலை மத்திகிரியில் உள்ள தனியார் கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக ,மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ண ரெட்டி, கலந்துகொண்டு தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 6 வார்டு நிர்வாகிகளிடம், உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து கேட்டறிந்தார். மேலும் கட்சிக்கு உறுப்பினர்களை அதிக அளவில் சேர்ப்பது குறித்து ஆலோசனைகள் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, தெற்கு பகுதி செயலாளர் வாசுதேவன் செய்திருந்தார்.
மேலும் இதில், குபேரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணிசெயலாளர் சென்னகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி ஆர்.மன்ற தலைவர் சந்திரன், துணை தலைவர் கிருஷ்ணன் துணை செ யலாளர் சாக்கப்பா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் முத்துராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.