என் மலர்
உள்ளூர் செய்திகள்

பணிகளை பிரகாஷ் எம்.எல்.ஏ., மேயர் சத்யா தொடங்கி வைத்தனர்.
ஒசூர் இயற்கை நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள்
- 15 லட்சம் மதிப்பில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.
- பணியை பிரகாஷ் எம்.எல்.ஏ.-மேயர் சத்யா தொடங்கி வைத்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி 5,6-வது வார்டுக்குட்பட்ட இயற்கை நகர் பகுதியில் சுமார் 15 லட்சம் மதிப்பில் புதிதாக கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படவுள்ளது.
இதற்கான பணிகளை செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் பூமிபூஜை செய்து தொடங்கிவைத்தனர்.
இதில், துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல தலைவர் ரவி, பகுதி செயலாளர்கள் வெங்கடேஷ், ராமு , மாமன்ற உறுப்பினர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Next Story






