என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் ஸ்கூட்டர் கவிழ்ந்து டிரைவர் பலி
- ஓசூரில் ஸ்கூட்டர் கவிழ்ந்ததில் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தர்.
- ஸ்கூட்டரில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஓசூர்,
ஓசூர் மனோஜ் நகரை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 41). டிரைவர். இவர் ஸ்கூட்டரில், கடந்த 11&ந் தேதி பெங்களூரு -ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை பக்கமாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த ஆனந்த் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






