என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓசூர் பகுதிகளில் வளர்ச்சி பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
- பணிகளை தாமாகவும், விரைந்து முடித்து பயன்பாடுக்கு விட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
- உரம் தயாரிக்கும் பணி, மற்றும் பதிவேடுகள், பணியாளர் விவரங்களை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஓசூர்,
ஓசூர் மாநகராட்சிக்குட்பட்ட அந்திவாடி அரசு உயர்நிலைப்பள்ளி, ஜூஜூவாடி, ஆனந்த்நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.5 கோடியே 18 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அந்திவாடி அரசு உயர்நிலைப்பள்ளியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சமையல் கூடம் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த அவர், பணிகளை தாமாகவும், விரைந்து முடித்து பயன்பாடுக்கு விட வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, அந்திவாடி விளையாட்டு மைதானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கம், நீச்சல்குளம், நடைபாதை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு, விளையாட்டு மைதானத்தில் கூடுதலாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து ஏ.எஸ்.டி சி. ஹட்கோவில், ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் குப்பை தரம் பிரிக்கும் கட்டிட கட்டுமான பணிகள், குப்பைகளை தாம் பிரித்து உரம் தயாரிக்கும் பணி, மற்றும் பதிவேடுகள், பணியாளர் விவரங்களை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் ஜூஜூவாடி பகுதியில், ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில், 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், ரூ.25 லட்சம் மதிப்பில் நகர்புற நலவாழ்வு மைய கட்டிட கட்டுமான பணிகளையும் கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டும், ஆனந்த் நகரில் குப்பை தரம் பிரிக்கும் 2 கட்டிடங்களின் கட்டுமான பணிகளையும், குப்பைகளை தரம் பிரித்து, பிளாஸ்டிக் கழிவுகளை மறு சுழற்சி செய்து மீண்டும் உபயோகப்படுத்தும் வகையில் மூலப்பொருட்களாக மாற்றும் பணிகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் சப்-கலெக்டர் சரண்யா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்