என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரூர் பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை
    X

    அரூர் பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை

    • சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அப்துல் ரசாக் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அரூர்,

    அரூர் பேருந்து நிலையம் மற்றும் நகரப் பகுதியில் முக்கியமான வீதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் டி.எஸ்.பி. தலைமையிலான சிறப்பு படையின் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    ரோந்து பணியில் ஈடுபட்ட போது அரூர் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கு விடுதியின் எதிர்ப்புறம் துணிக்கடையில் செல்போனில் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக அரூர் பகுதியை சேர்ந்த

    வகித் மகன் அப்துல் ரசாக் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரிடம் இருந்து ரூ.9,750 பறிமுதல் செய்யப்பட்டது

    Next Story
    ×