search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூடலூரில்   குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை
    X

    கூடலூரில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை

    • நகரசபை கூட்டத்தில் வலியுறுத்தல்.
    • உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    ஊட்டி,

    கூடலூர் நகராட்சி அலுவலக அரங்கில் நகர சபை கூட்டம் நடைபெற்றது. நகராட்சி தலைவர் பரிமளா தலைமை தாங்கினார்பொறியாளர் பார்த்தசாரதி, துணைத்தலைவர் சிவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் நகராட்சி பணி மேற்பார்வையாளர் ஆல்தொரை, குடிநீர் குழாய் ஆய்வாளர் ரமேஷ் மற்றும் சையத் அனுப்கான், வர்கிஷ், ஷகிலா, வர்கிஷ், ஆக்னஸ் கலைவாணி உள்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து மன்ற தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது. பின்னர் கவுன்சிலர்கள் விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-

    கவுன்சிலர் சத்தியன்:- 4 வார்டுகளில் மட்டும் குடிநீர் திட்ட பராமரிப்புக்கு ரூ.3.50 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளதாக தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனது வார்டு உள்பட பல இடங்களில் பழுதடைந்த குழாய்கள் சீரமைக்கப்படவில்லை என்று கூறியும் நடவடிக்கை எடுப்பதில்லை

    கவுன்சிலர் வெண்ணி லா:-காந்தி சிலை மற்றும் மண்டபத்தை வர்ணம் பூசி பராமரிக்க 2 முறை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும்.

    துணைத்தலைவர் சிவராஜ்:-நகராட்சியில் நிதி பற்றாக்குறை இருந்து வந்தது. தற்போது நிதிநிலை சரியாகி வருகிறது. இதனால் ஒவ்வொரு வார்டுகளிலும் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படும்.

    கவுன்சிலர் ஷகிலா:-மன்ற கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் கலந்து கொள்ள வில்லை. இதனால் வார்டுகளில் உள்ள குறைகளை தெரிவிக்க முடியவில்லை.

    நகராட்சி பொறியாளர் பார்த்தசாரதி:- ஆணையாளர் கலந்து கொள்ள இருந்த நிலையில் திடீரென உயர் அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. இதனால் நகராட்சி கூட்டத்தில் கலந்து கொள்ள வில்லை.

    கவுன்சிலர் லீலா:- ஹெல்த்கேம்ப் தலைமை தபால் நிலையம், ஊமைத்துரை காடு பகுதியில் குப்பைகள் கொட்டப்படுகிறது. பெரும்பாலான சுற்றுலா பயணிகள் அப்பகுதியில் வந்து நிற்பதால் குப்பைகள் காணப்படுகிறது. இதை தடுக்க வேண்டும்.

    தொடர்ந்து கோடை காலம் நெருங்குவதால் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து கவுன்சிலர்களும் வலியுறுத்தினர்.அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

    Next Story
    ×