என் மலர்
உள்ளூர் செய்திகள்

தேன்கனிக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்
- நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய 100 பேர் காங்கிரசில் இணைந்தனர்.
- தளி தொகுதி தலைவர் அக்மல் தலைமையில் சால்வை அணிவித்து வரவேற்றனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள மேற்கு மாவட்ட அலுவலகத்தில், கிருஷ்ணகிரி எம்.பி செல்லகுமார் வழிகாட்டுதலின்படி, நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய 100 பேர் இளைஞர் காங்கிரசில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் அப்துல் ரஹ்மான், மாநில காங்கிரஸ் செயலாளர் தேன்கு அன்வர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நாம் தமிழர் கட்சியின் தளி தொகுதி தலைவர் அக்மல் தலைமையில், அக்கட்சியிலிருந்து விலகியவர்கள் இளைஞர்
காங்கிரசில் இணைந்தனர். புதிதாக கட்சியில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றனர்.
Next Story