search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில்   அரசு போக்குவரத்து கழக சங்க விளக்க கூட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.

    தருமபுரியில் அரசு போக்குவரத்து கழக சங்க விளக்க கூட்டம்

    • ஓய்வூதியர்களின் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
    • அரசுத் துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும்,

    தருமபுரி,

    தருமபுரி பாரதிபுரத்தில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கம் சார்பில்15 -வது மாநில மாநாட்டு தீர்மான விளக்க வாயிற் கூட்டம் நடந்தது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒப்பந்தத்தை உடனடியாக பேசி முடிக்க வேண்டும், அரசுத் துறையை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், போக்குவரத்து கழகத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், ஓய்வூதியர்களின் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு நிறைவேற்றாத பட்சத்தில் வேலை நிறுத்தத்திற்கு தயாராவோம் என கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் முரளி வரவேற்புரை ஆற்றினார். மண்டல பொருளாளர் முருகன் நன்றி தெரிவித்தார்.

    Next Story
    ×