என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில் வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்
- 70 வாகனங்கள், 13-ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 9 மணிக்கு, தருமபுரி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளன.
- 13.10.2022 - ம் தேதி காலை 7 மணிக்கு நேரில் பார்வையிடலாம்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு, மதுவிலக்குச் சட்டம் 14(4) படி அரசுக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 12 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 58 இருசக்கர வாகளங்கள் மொத்தம் 70 வாகனங்கள், 13-ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 9 மணிக்கு, தருமபுரி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளன.
நான்கு சக்கர வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் முன்வைப்பு தொகையாக ரூபாய் 10,000-ம், 13.10.2022 - ம் தேதி காலை 8 மணிக்குள் ஏலம் நடைபெறவுள்ள இடத்தில் செலுத்த வேண்டும். முன்வைப்புத்தொகை செலுத்துவோர்ம ட்டுமே ஏலத்தில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர்.
ஏலம் விடப்படவுள்ள வாகனங்களைத் தருமபுரி மாவட்ட ஆயுதப்படை அலுவலக வளாகத்தில் 13.10.2022 - ம் தேதி காலை 7 மணிக்கு நேரில் பார்வையிடலாம். இருசக்கர வாகனத்தினை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும்.
நான்கு சக்கர வாக னத்திற்கு ஏலத்தொகைக்கு ஏற்ப 18 விழுக்காடு GST யும், இருசக்கர வாகனத்திற்கு ஏலத்தொகைக்கு ஏற்ப 12 விழுக்காடு GST யும் சேர்த்துச் செலுத்தப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமல்பிரிவு, தருமபுரி அலுவலகத்தினை நேரடியாகவோ, தொலை பேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.






