என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தருமபுரி மாவட்டத்தில் நடப்பாண்டில் கொடி நாள் நிதி ரூ. 1.04 கோடி வசூல்- கலெக்டர் சாந்தி தகவல்
- இந்த ஆண்டில் மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால் இலக்கில் 90 சதவிகிதம் வசூல் செய்யப்பட்டு ரூ.1.04 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.
- முன்னாள் படை வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை முன்னாள் படைவீரர் அலுவலகத்தினை அணுகி முழுமையாக பெற்று பயனடைய கேட்டுக்கொள்கிறேன்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் படைவீரர் கொடி நாளையொட்டி நேற்று மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் கொடிநாள் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-
நம் தாய்நாட்டை காக்கும் வகையில் பணி, வெயில், மழை எதுவும் பாராமல் நமது தேசத்திற்காக பாதுகாக்கும் படைவீரர்கள் மற்றும் போர் வீரர்களின் மகத்தான சேவையினை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் டிசம்பர் 7-ஆம் நாள் படைவீரர் கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த படைவீரர் கொடி நாளில் தேசத்திற்காக பாதுகாக்கும் வீரர்களை கௌரவிக்கும் விதமாக இன்று தேநீர் உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தருமபுரி மாவட்டத்தில் இந்த ஆண்டில் மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால் இலக்கில் 90 சதவிகிதம் வசூல் செய்யப்பட்டு ரூ.1.04 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டுகளிலும் இலக்கினை விட கூடுதலாக வசூல் செய்து வழங்கிட அரசுத்துறை அலுவலர்கள் கேட்டுக ்கொள்ளப்படுகிறார்கள்.
தருமபுரி மாவட்டத்தில் முன்னாள் படை வீரர்க ளுக்கென தனியாக ஒரு பாலிகிளினிக் மருத்துவ மனை நிறுவிட மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாவட்ட நிர்வாகம் என்னென்றும் முன்னாள் படைவீரர் நலனில் உறுதுணையாக இருக்கும் என்று இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், முன்னாள் படை வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை முன்னாள் படைவீரர் அலுவலகத்தினை அணுகி முழுமையாக பெற்று பயனடைய கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனை தொடர்ந்து, முன்னாள் படைவீரர்கள் நலத்துறையின் சார்பில் 20 முன்னாள் படைவீரர்க ளுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.
முன்னதாக, காலை தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடிநாள் தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் சாந்தி கொடிநாள் நிதி அளித்து வசூலை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின்போது தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் (பொ) ஜெயக்குமார், முன்னாள் படைவீரர் நலன் உதவி இயக்குநர் வெங்கடேஷ்குமார், கர்னல் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் படைவீரர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்