என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்னூரில் நல் உள்ளம் அறக்கட்டளை தொடக்கவிழா
    X

    குன்னூரில் நல் உள்ளம் அறக்கட்டளை தொடக்கவிழா

    • மரம் நடுவிழா நடந்தது.
    • அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் சத்குரு ஆசிரமத்தில் நல் உள்ளம் அறக்கட்டளை தொடக்க விழா மற்றும் மரம் நடுவிழா நடந்தது. விழாவுக்கு அறக்கட்டளை நிறுவனர் உலிக்கல் சண்முகம் தலைமை தாங்கினார். சத்குரு ஆசிரம மாணவர்கள் கேக் வெட்டி அறக்கட்டளையை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன. மரம் நடும்விழா மின்வாரிய பொறியாளர் ஜான்சன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் சமூக ஆர்வலர் உஷா பிராங்கிளின், மின்வாரிய பொறியாளர் ஜான்சன் மற்றும் புதிய புயல் ஆசிரியர் ஆறுமுகம், அரைஸ்ஷைன்நிறுவனர் ஜாம்பவான் ஜெரால், கலாம் நினைவு அறக்கட்டளை நிறுவனர் சாதிக் சேனா, தமிழ்நாடு இருசக்கர, நான்கு சக்கர வாகன பொதுச்செயலாளர் ஹன்குமார் மற்றும் சத்குரு ஆசிரம நிர்வாகி சிவா மற்றும் பாலையா, ஆடிட்டர் சிரில் மற்றும் பள்ளி மாணவர்கள், நல்உள்ளம் அறக்கட்டளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    முடிவில் நல் உள்ளம் அறக்கட்டளையின் நிறுவனரின் தாயார் சுப்பம்மாளின் 37-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

    Next Story
    ×