search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தை இல்லாத ஏக்கத்தில் உயிரை மாய்த்த கூலி தொழிலாளி
    X

    குழந்தை இல்லாத ஏக்கத்தில் உயிரை மாய்த்த கூலி தொழிலாளி

    • திருமணமாகி 7 வருடமாகிறது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.
    • மனமுடைந்து காணப்பட்ட ரகு கடந்த 21-ம் தேதி வீட்டில் விஷம் குடித்துள்ளார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ரகு (வயது28), இவருக்கு திருமணமாகி 7 வருடமாகிறது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

    இதனால் மனமுடைந்து காணப்பட்ட ரகு கடந்த 21-ம் தேதி வீட்டில் விஷம் குடித்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைகாக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ரகு இறந்தார்.

    இது குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×