என் மலர்
உள்ளூர் செய்திகள்

காவேரிப்பட்டினம் ஒன்றியத்தில் புதிய நூலகத்தை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ.
- புதிய நூலகத்தை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும் மதியழகன் திறந்து வைத்தார்.
- பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
காவேரிப்பட்டினம்.
ஆவத்தவாடி கிராமத்தில் மாவட்ட ஊராட்சி குழு மாநில நிதிக்குழுவின் கீழ் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை மற்றும் பேருந்து பயனியர் நிழற்கூடம் அமைக்கும் பணி, தட்ர அள்ளி ஊராட்சி சோபனூர் கிராமத்தில் தமிழ்நாடு கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 37.93 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தும் ,மாவட்ட ஊராட்சி குழு மாநில நிதிக்குழுவின் கீழ் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நூலகத்தை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினரும் மதியழகன் திறந்து வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்ட அவை தலைவர் நாகராஜ் , மாநில விவசாய அணி துணை செயலாளர் டேம்.வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு கிருபாகரன், பொதுக்குழு உறுப்பினர் அஸ்லாம், ஒன்றிய செயலாளர் மகேந்திரன், நாகரசம்பட்டி பேரூராட்சி தலைவர் தம்பிதுரை , மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் வித்தியா சங்கர், காவேரிபட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில், மாவட்ட நூலக அலுவலர் தனலட்சுமி, நூலகர் சாந்தலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ரமேஷ் பெருமாள், துணைத் தலைவர்கள் வடிவேல் ,முரளி, கவுன்சிலர் பத்மினி சேகர், வடிவேல் ,சுரேஷ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஸ்ரீதர் ,அண்ணாமலை, கிளை செயலாளர்கள் நாகபூஷணம், பாஸ் ( எ)நாராயணசாமி ,சேகர், மூர்த்தி, கேட் மணி, பொதுமக்கள் கலந்து கொண்டனர்.






