என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளியில்  ஸ்கேட்டில் மாணவர்கள் தேசிய கொடி ஏந்தி ஊர்வலம்
    X

    போச்சம்பள்ளியில் ஸ்கேட்டில் மாணவர்கள் தேசிய கொடி ஏந்தி ஊர்வலம்

    • மாணவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் தேசிய கொடியேந்தி சென்றனர்.
    • ஸ்கேட்டிங் மூலம் ஊர்வலமாக அணிவகுத்து சென்று பொதுமக்களை ஈர்க்க செய்தது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி பகுதியை சேர்ந்த 5 வயது சிறுவன் அஜீப். ஸ்கேட்டிங் போட்டியில் 16 மெடல்ஸ் வாங்கியுள்ளான். மேலும் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் ஒரு வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளான்.

    இதேபோல் அகிலேஷ் குமார் 9 வயது சிறுவன் ஸ்கேட்டிங் போட்டியில் 8 பதக்கங்கள் பெற்றுள்ளார்.

    இம் மாணவர்கள் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் தேசிய கொடியேந்தி 75-வது சுதந்திர தினத்தை மரியாதை செலுத்தும் வகையில் போச்சம்பள்ளி பேருந்து நிலையம் முதல் கொடமாண்டப்பட்டி சாலை வரை தேசியக் கொடியேந்தி ஸ்கேட்டிங் மூலம் ஊர்வலமாக அணிவகுத்து சென்று பொதுமக்களை ஈர்க்க செய்தது.

    Next Story
    ×