என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில்   செங்கல் சூளைகளுக்காக அதிக அளவு   வெட்டப்படும் பனை மரங்கள்
    X

     போச்சம்பள்ளி அருகே பனை மரங்களை வெட்டியுள்ள காட்சி.

    போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் செங்கல் சூளைகளுக்காக அதிக அளவு வெட்டப்படும் பனை மரங்கள்

    • வெட்டப்பட்டு பனை மரங்கள் அழிந்து வருவதாக கூறி இத்தடையை தமிழக அரசு விதித்தது.
    • கடந்த சில ஆண்டுகளாக போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பனை மரங்கள் வெட்டப்பட்டு செங்கல் சூலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

    மத்தூர்,

    தமிழக அரசு கடந்த 2021-ம் ஆண்டு வேளாண் பட்ஜெட்டில் பனை மரங்களை வெட்ட தடை விதித்தது. நாட்டில் அதிக அளவு பனை மரங்கள் வெட்டப்பட்டு பனை மரங்கள் அழிந்து வருவதாக கூறி இத்தடையை தமிழக அரசு விதித்தது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவு பனை மரங்கள் உள்ளன.

    கடந்த சில ஆண்டுகளாக போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து பனை மரங்கள் வெட்டப்பட்டு செங்கல் சூலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

    இதுகுறித்து பனை வெட்டும் வியாபாரி பழனி அவர்களிடம் கேட்டபோது பட்டா நிலத்தில் தேவையில்லாத பனை மரங்களை வெட்டி வியாபாரம் செய்து வருகிறேன்.

    அந்த பனை மரங்கள் தேவையில்லை என்கிற காரணத்தாலும் விவசா யத்திற்கு இடையூறாக இருக்கின்ற காரணத்தாலும் அதுபோன்ற மரங்களை வெட்டி வருகிறோம் என தெரிவித்தார்.

    இதுகுறித்து போச்சம் பள்ளி வட்டாட்சியர் கூறிய போது பனை மரங்களை வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளது. வெட்டியவர்கள் மீது சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மூலம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    Next Story
    ×