search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளி, கல்லாவி பகுதிகளில்  நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    போச்சம்பள்ளி, கல்லாவி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    • 26-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி மின்வாரிய செயற்பொறியாளர் உமாராணி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    போச்சம்பள்ளி, கல்லாவி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை 26-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதனால் பாரண்டப்பள்ளி, கொடமாண்டப்பட்டி, புளியாண்டப்பட்டி, மாதம்பாதி, முருக்கம்பட்டி, காரடனூர், சிப்காட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் மின்சாரம் இருக்காது.

    கல்லாவி, ஆனந்தூர், திருவனப்பட்டி, கிரிகேபள்ளி, காட்டுபட்டி, வேடப்பட்டி, சந்திரப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சி குப்பம், சூளகரை, ஓலப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

    Next Story
    ×