என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே மோரமடுகு ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் ஆய்வு மேற்கொண்டு மாணவர்களின் கல்வி திறனை கேட்டறிந்தார்.
பெல்லாரம்பள்ளி, மோரமடுகு ஊராட்சிகளில்கிருஷ்ணகிரி கலெக்டர் ஆய்வு
- ரேஷன் கடைகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- இருப்புகள் குறித்து பதிவேடுகள் மற்றும் மின்னணு எந்திரத்தை ஆய்வு செய்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், பெல்லாரம்பள்ளி, மோரமடுகு, ஊராட்சிகளில் அங்கன்வாடி மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, ரேஷன் கடைகளை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
முன்னதாக கலெக்டர் பெல்லாரம்பள்ளி ஊராட்சியில் ரேஷன் கடையை ஆய்வு மேற்கொண்டு குடும்ப அட்டைகள் விவரங்கள், அரிசி, பருப்பு, சக்கரை, கோதுமை, உப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இருப்பு விவரங்கள், இந்த மாதம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வினியோகம் செய்யப்பட்ட பொருட்கள் இருப்புகள் குறித்து பதிவேடுகள் மற்றும் மின்னணு எந்திரத்தை ஆய்வு செய்தார்.
பின்னர் பெல்லாரம்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர், நோயாளிகள் வருகை, மருந்துகள் இருப்புகள், மேல்சிகிச்சைகாக பரிந்துரை செய்யப்பட்ட நோயாளிகள் விவரங்கள், மற்றும் சுகாதார பணிகளை ஆய்வு மேற் கொண்டார்.
இதை யடுத்து மோரமடுகு ஊராட்சியில் அங்கன்வாடி மையம் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் குடிநீர், கழிப்பறை வசதிகள் மற்றும் பள்ளி சுற்றி தூய்மை பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளிடம் ஆசிரியர்கள் பாடம் நடத்திடும் விதம் மற்றும் மாணவர்களின் கல்வித் திறனை கேட்டறிந்தார்.
பள்ளி வளாகத்தை தூய்மையாக பராமரித்திட வேண்டும் என ஆசிரியர்களை கலெக்டர் கேட்டுக் கொண்டார். இந்த ஆய்வின் போது துறை சார்ந்த அலுவலர்கள், ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.






