என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருட்டுத்தனமாக மது விற்றவர் கைது
- சுங்குவார்சத்திரம் போலீசார் திருமங்கலம் ஊராட்சியில் சோதனை மேற்கொண்டனர்.
- ஸ்ரீதர் என்வரிடம் சோதனை செய்ததில் 10 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த திருமங்கலம் ஊராட்சியில் கள்ளச் சந்தையில் மர்மநபர்கள் மது விற்பதாக சுங்குவார் சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரந்தாமன் மற்றும் போலீசார் திருமங்கலம் ஊராட்சியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது ஏரிக்கரை அருகே ஒரு நபர் திருட்டுத்தனமாக மது விற்றுக் கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் அந்த நபர் தப்பி ஓட முயன்றார். போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அவர் திருமங்கலம் ஊராட்சி, பஜனை கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீதர் (வயது 42) என்பதும் அவரிடம் சோதனை செய்ததில் 10 மது பாட்டில்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதரை கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காஞ்சிபுரம் கிளை சிறையில் அடைத்தனர்.






