search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு, எம்.எல்.ஏ. வாழ்த்து
    X

    ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு பூங்கொத்து கொடுத்து, மதியழகன் எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்தார்.

    ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்ற மாணவிக்கு, எம்.எல்.ஏ. வாழ்த்து

    • ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் 289-வது இடத்தை பெற்று தேர்ச்சி பெற்றார்.
    • மதியழகன் எம்.எல்.ஏ ஹரிணிக்கு சால்வை அணிவித்தும் வாழ்த்து கூறினார்.

    கிருஷ்ணகிரி,

    ஐ.ஏ.எஸ். தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கருங்காலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரவி கோமதி தம்பதியரின் மகள் கே.ஆர். ஹரிணி ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் 289-வது இடத்தை பெற்று தேர்ச்சி பெற்றார்.

    தேர்வில் வெற்றி பெற்ற ஹரிணியின் இல்லத்திற்கு கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் நேரில் சென்றார். அங்கு ஹரிணிக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும், மதியழகன் எம்.எல்.ஏ. வாழ்த்து கூறினார்.

    கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தமைக்காக தனது வாழ்த்துக்களை கூறிய அவர், ஹரிணியை ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெறுவதற்கு ஊக்கமும், ஆக்கமும் அளித்த பெற்றோரையும் மதியழகன் எம்.எல்.ஏ. பாராட்டினார்.

    Next Story
    ×