என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணத்திற்கு சென்று விட்டு தாமதமாக வந்ததால் மனைவியை கொன்றேன்
    X

    திருமணத்திற்கு சென்று விட்டு தாமதமாக வந்ததால் மனைவியை கொன்றேன்

    • கைதான கணவர் வாக்குமூலம்.
    • உடலை சாக்குமூட்டையில் கட்டி புதரில் வீசினேன்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புத்தூர் வயலை சேர்ந்தவர் மோகன்(வயது59). விவசாயி. இவரது மனைவி உஷா(53). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    கடந்த 19-ந் தேதி உறவினர் ஒருவரின் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு உஷா சென்றார். அதன் பின்னர் அவர் மாயமாகி விட்டார். பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து உஷாவின் தம்பி சத்யன்கூடலூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான உஷாவை தேடி வந்தனர்.

    சுவற்றில் ரத்தக்கறை

    இந்த நிலையில் போலீசாருக்கு உஷாவின் கணவர் மோகனின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. சந்தேகத்தின் பேரில் அவரை பிடித்து விசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதனால் மேலும் சந்தேகம் அதிகரிக்கவே அவரது வீட்டிற்கு சென்று சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வீட்டில் உள்ள சுவற்றில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதுகுறித்து விசாரித்த போது மனைவியை கொலை செய்து, உடலை புதரில் வீசியதை மோகன் ஒப்புக்கொண்டார்.

    போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது-

    எனக்கும், எனது மனைவிக்கு அடிக்கடி சண்டை வரும். பின்னர் சமாதானமாகி விடுவோம். கடந்த 19-ந் தேதி எனது மனைவி உறவினர் ஒருவர் வீட்டில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கிருந்து வீட்டிற்கு தாமதமாக வந்தார்.

    இதுகுறித்துகேட்ட போது தகராறு ஏற்பட்டது. இதனால் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த நான் அவரை தள்ளி விட்டேன். இதில் அவரது தலை வீட்டின் சுவற்றில் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    மனைவி இறந்ததால் மாட்டிகொள்வேன் என நினைத்த நான் அதனை மறைப்பதற்காக உடலை சாக்குமூட்டையில் கட்டி காரில் ெகாண்டு ெசன்று தேவர்சோலை பாடந்துரையில் ஒரு புதரில் வீசினேன். அங்கு கோழிக்கழிவுகள் கிடப்பதால் எப்போதும் துர்நாற்றம் வீசும். இதனால் தப்பி விடலாம் என நினைத்தேன். பின்னர் எதுவும் தெரியாதது போல் மனைவி மாயமானதாக மனைவியின் சகோதரருடன் ெசன்று புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி என்னை கைது செய்துவிட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.

    கைது

    இதையடுத்து போலீசார் மோகனை கைது செய்தனர்.தொடர்ந்து உடல் வீசப்பட்ட இடத்திற்கு அவரை அழைத்து சென்று இறந்து கிடந்த உஷாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×