search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனைவி மீது சூடான டீயை ஊற்றிய கணவர்
    X

    மனைவி மீது சூடான டீயை ஊற்றிய கணவர்

    • வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த பிரபாகரன் மனைவியிடம் குடிக்க டீ தருமாறு கேட்டார்.
    • அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.

    அம்பத்தூர்:

    அயனாவரம், பாளையம் பிள்ளை நகரை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி சுப்ரியா(வயது34). இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டு ஆகிறது. கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த பிரபாகரன் மனைவியிடம் குடிக்க டீ தருமாறு கேட்டார். ஆனால் சுப்ரியா டீ தயார் செய்ய தாமதமானதாக தெரிகிறது.

    நீண்ட நேரம் கழித்து அவர், கணவர் பிரபாகரனுக்கு சூடான டீயை கொடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரபாகரன் அந்த சூடான டீயை வாங்கி மனைவி சுப்ரியாவின் மீது ஊற்றினார். இதில் சுப்ரியாவின் தோள்பட்டை மற்றும் கை வெந்தது. அவர் அலறி துடித்தார். பின்னர் அவர் கணவரிடம் கோபித்துக்கொண்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றுவிட்டார். உடல் வெந்த சுப்ரியாவை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சுப்ரியா சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதுகுறித்து அயனாவரம் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்த பிரபாகரனை கைதுசெய்தனர்.

    Next Story
    ×