என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேனி அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கணவர் கைது
- கருத்துவேறுபாடு காரணமாக கணவன்-மனைவி 2 பேரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
- சம்பவத்தன்று ஆத்திரமடைந்த பழனிகுமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பவித்ராவை சரமாரியாக வெட்டினார்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளிபட்டியை சேர்ந்தவர் பழனிக்குமார்(39). ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது மனைவி பவித்ரா(27). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். பவித்ரா டெய்லர் கடை நடத்தி வந்துள்ளார்.
கருத்துவேறுபாடு காரணமாக கணவன்-மனைவி 2 பேரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தனது மனைவி கடைக்கு சென்ற பழனிக்குமார் குழந்தைகளை பார்க்க வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு பவித்ரா மறுப்பு தெரிவித்து வெளிேயறுமாறு கூறியுள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பழனிகுமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பவித்ராவை சரமாரியாக வெட்டினார். படுகாயமடைந்த அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்