என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வீட்டு மனை பட்டா வழங்கி வீடு கட்டித்தர வேண்டும்- மீனவ மக்கள் கலெக்டரிடம் மனு
- சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 120 வீடுகளில் 400 பேர் வசித்து கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகிறோம்.
- கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டதால் எங்கள் ஊரில் உள்ள அனைத்து வீடுகளும் சேதமடைந்துவிட்டது.
தரங்கம்பாடி:
சீர்காழி தாலுக்கா வெள்ள மணல் மீனவ மக்கள் சார்பில் கிராமத் தலைவர் வீரபாண்டியன், துணைத்தலைவர் புகழேந்தி ஆகியோர் கலெக்டர் லலிதாவிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களது கிராமம் கொள்ளிடம் ஆற்றின் கழிமுகத்தின் படுகையில் அமைந்துள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 120 வீடுகளில் 400 பேர் வசித்து கொண்டு மீன்பிடி தொழில் செய்து வருகிறோம்.
இந்த ஆண்டு கர்நாடக மாநிலத்தின் ஏற்பட்ட தொடர் மழை காரணமாக காவிரி ஆற்றில் வெள்ள நீர் பெருக்கெடுத்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டதால் எங்கள் ஊரில் உள்ள அனைத்து வீடுகளும் சேதமடைந்து விட்டது.
தொடர் வெள்ள நீரினால் மண் அரிப்பு ஏற்பட்டு படுகை பகுதி பாதிப்புக்குள்ளாகியது. எனவே எங்களுக்கு ஆற்றின் கரையோரம் இலவச வீட்டு மனை பட்டா வழங்கி, அதில் வீடு கட்டிதர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அனைவரும் வேறு இடத்துக்கு வருவார்களேயானால் இடம் ஏற்பாடு செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் லலிதா கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்