search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போச்சம்பள்ளி அருகே வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது
    X

    கைதான இருவரையும் படத்தில் காணலாம்.

    போச்சம்பள்ளி அருகே வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது

    • மர்ம ஆசாமிகள் இரண்டு பேர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
    • இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் சிலிண்டரை பறிமுதல் செய்து மீட்டனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள கொடமண்டபட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 45).

    இவர் வீட்டில் குடும்பத்துடன் தூங்கி கொண்டிருந்த போது மர்ம ஆசாமிகள் இரண்டு பேர் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.

    வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் கேஸ் சிலிண்டர் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.

    இது குறித்து தங்கவேல் மத்தூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் தங்கவேல் வீட்டில் கைவரிசை காட்டியது சேகர் (எ) சொட்ட சேகர், குமார் (எ) புட்டன் குமார் என்பது தெரிய வந்தது.

    இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் சிலிண்டரை பறிமுதல் செய்து மீட்டனர்.

    Next Story
    ×