என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓட்டல் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
- வேலை செய்யும் தொழிலாளர்கள் கூத்தனப்பள்ளிக்கு சென்று ராமகிருஷ்ணப்பா இருக்கும் வீட்டின் கதவை தட்டினர்.
- ஜன்னல் வழியாக பார்த்தபோது ராமகிருஷ்ணப்பா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
கிருஷ்ணகிரி,
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் மாருதிபடவேணா பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணப்பா (வயது52).
இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் அளேசீபம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் கூலி வேலை செய்து வருகிறார். இதற்காக அவர் கூத்தனப்பள்ளியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தார்.
ராமகிருஷ்ணப்பா கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலையை முடித்து விட்டு தங்கி இருக்கும் அறைக்கு சென்றார். ஆனால் அவர் மீண்டும் வேலைக்கு வரவில்லை.
உடனே உடன் வேலை செய்யும் தொழிலாளர்கள் கூத்தனப்பள்ளிக்கு சென்று ராமகிருஷ்ணப்பா இருக்கும் வீட்டின் கதவை தட்டினர். ஆனால் அவர் வெளியே வரவில்லை. உடனே ஜன்னல் வழியாக பார்த்தபோது ராமகிருஷ்ணப்பா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து அவர்கள் உத்தனப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து ராமகிருஷ்ணப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ராமகிருஷ்ணப்பா குடும்ப தகராறு காரண மாக தூக்குபோட்டு கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற் காக தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.






