என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓசூர் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம்
- தி.மு.க. கவுன்சிலர் ரமேஷ், பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்விகள் எழுப்பினார்.
- வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ளும்போது, அந்தந்த பகுதி கவுன்சிலர்களுக்கு தெரியபடுத்த வேண்டும்
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம், நேற்று நடைபெற்றது.
ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு, ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாராயணசாமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமச்சந்திரன், பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முரளி, சந்தியா கோபி ஆகியோர் தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து காரசாரமாக பேசினர்.
இதேபோல், தி.மு.க. கவுன்சிலர் ரமேஷ், பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்விகள் எழுப்பினார்.
கூட்டத்தில், ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் உள்ள பாழடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளிட்டவைகளை இடித்து அகற்றுதல் உள்ளிட்ட 26 தீர்மானங்கள், மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.
மேலும், வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ளும்போது, அந்தந்த பகுதி கவுன்சிலர்களுக்கு தெரியபடுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்