search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம்
    X

    ஓசூர் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம்

    • தி.மு.க. கவுன்சிலர் ரமேஷ், பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்விகள் எழுப்பினார்.
    • வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ளும்போது, அந்தந்த பகுதி கவுன்சிலர்களுக்கு தெரியபடுத்த வேண்டும்

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியக்குழு சாதாரண கூட்டம், நேற்று நடைபெற்றது.

    ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு, ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நாராயணசாமி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமச்சந்திரன், பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றிய கவுன்சிலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் முரளி, சந்தியா கோபி ஆகியோர் தங்கள் பகுதி பிரச்சினைகள் குறித்து காரசாரமாக பேசினர்.

    இதேபோல், தி.மு.க. கவுன்சிலர் ரமேஷ், பல்வேறு பிரச்சினைகள் குறித்து கேள்விகள் எழுப்பினார்.

    கூட்டத்தில், ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் உள்ள பாழடைந்த நிலையில் உள்ள அங்கன்வாடி மையம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி உள்ளிட்டவைகளை இடித்து அகற்றுதல் உள்ளிட்ட 26 தீர்மானங்கள், மன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு, நிறைவேற்றப்பட்டன.

    மேலும், வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ளும்போது, அந்தந்த பகுதி கவுன்சிலர்களுக்கு தெரியபடுத்த வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    Next Story
    ×