என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் மாநகர தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
- உழவர்சந்தை எதிரில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
- விழாவிற்கு மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார்.
ஓசூர்,
ஓசூர் மாநகர தி.மு.க. சார்பில், உழவர்சந்தை எதிரில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
விழாவிற்கு மாநகர செயலாளரும், மேயருமான எஸ்.ஏ.சத்யா தலைமை தாங்கினார்.மாநகர அவைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். தண்ணீர் பந்தலை, மேற்கு மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ. ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், நுங்கு, நீர்மோர், தர்பூசணி பழம் ஆகியவற்றை வழங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மேலும் இதில், மாவட்ட அவைத்தலைவர் யுவராஜ், மாவட்ட பொருளாளர் சுகுமாரன், துணை மேயர் ஆனந்தய்யா, பகுதி செயலாளர் ராமு, மாநகராட்சி கவுன்சிலர்கள் மோசின்தாஜ் நிசார் அகமது, மாதேஸ்வரன், சென்னீரப்பா, மற்றும் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






