என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓசூர் எம்.ஜி.ஆர். கல்லூரியில் கணினி பயன்பாட்டியியல் துறை சார்பில் கருத்தரங்கம்
- தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கினார்
ஓசூர்,
ஓசூர் எம்ஜிஆர் கல்லூரியில் பி.காம். (கணினி பயன்பாட்டியியல்) துறை சார்பில் "இன்றைய நவீன யுகத்தில் வணிக நிலைப்புத் தன்மை மற்றும் வாய்ப்புகள்" என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது.
இந்த கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை தாங்கினார். துறைத் தலைவர் வெங்கடே சன் வரவேற்று பேசினார். இதில் புதுச்சேரி பல்கலைக் கழகத்திலிருந்து, இணைப் பேராசிரியர் பாண்டு, சிறப்பு விருந்தினராக பங்கேற்று, புதிய வணிக வாய்ப்புகள் மற்றும் வணிக நிலைத்தன்மை அதில் ஏற்பட்ட மாற்றங்கள் , புதிய தொழில் வாய்ப்புகள் , கண்டுபிடிப்புகள், தொழில் வளர்ச்சிப் பற்றி விளக்கி பேசினார்.
மேலும் இதில், பிற கல்லூரியில் இருந்து பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரை களைச் சமர்ப்பித்து பேசினர்.
இந்த கருத்தரங்கத்திற்கான ஏற்பாடுகளை, கணினி பயன்பாட்டியியல் துறை உதவி பேராசிரியர்கள், மற்றும் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.முடிவில் உதவி பேராசிரியர் ஸ்ரீகாந்த் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்