என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர், மத்திகிரி பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
- நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நிறுத்தம்.
- ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் தெரிவித்துள்ளார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மின்வாரிய செயற்பொறியாளர் கிருபானந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்டம், ஓசூர் கோட்டத்தை சேர்ந்த ஓசூர் துணைமின்நிலையத்தில், நாளை (செவ்வாய்கிழமை) அத்தியாவசிய பணிகள் மே ற்கொள்ளப்படவுள்ளன.
எனவே, நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை, ஓசூர் எம்.ஜி.ரோடு, காமராஜ் காலனி, அண்ணாநகர், ராம்நகர், பேருந்து நிலையம், ஸ்ரீநகர், பிருந்தாவன் நகர், நரசிம்மா காலனி, அலசநத்தம், நியூ அட்கோ, அப்பாவு நகர், முனீஸ்வர் நகர், துவாரகா நகர், மத்தம், கொத்தூர்,ஆனந்தா நகர், கிருஷ்ணா நகர், அண்ணாமலை நகர், டைட்டான் இண்டஸ்ட்ரீஸ், சாந்தபுரம், பாலாஜி நகர் ( சின்ன எலசகிரி), சிப்காட் ஹவுசிங் காலனி (பகுதி), நேதாஜி நகர், அசோக் லேலண்ட் - 1, சூர்யா நகர், அரசனட்டி, டி.வி.எஸ்.நகர், சிவகுமார் நகர், அந்திவாடி, மத்திகிரி, குதிரே பாளையம், காடிபாளையம், டைட்டான் டவுன்சிப், பழைய மத்திகிரி, எடயநல்லூர், கொத்தகொண்டபள்ளி, பொம்மண்டபள்ளி மற்றும் சுற்றுவட்டாரத்தில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






