என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூர் அரசு ஐ.டி.ஐ.யில் 2022-23் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை -30-ந் தேதி நடைபெறுகிறது
- நேரடி மாணவர் சேர்க்கை வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- தொழிற்பிரிவுகளுக்கு ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு ஐ.டி.ஐ.நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-
ஓசூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) 2022-23-ம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை வருகிற 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இதில் சேர 14 வயது முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14, உச்ச வயது வரம்பு இல்லை.
பெண்களுக்கான சிறப்பு தொழிற்பிரிவுகளாக, கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர், கம்மியர் இயந்திரம் மற்றும் மின்னணுவியல் தொழில்நுட்பவியலாளர் ஆகியவை உள்ளது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஒயர்மேன் (2 வருடம்), வெல்டர் (1 வருடம்) ஆகிய பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், கணினி வன்பொருள் மற்றும் வலைதள பராமரிப்பு, மின் பணியாளர், கம்மி யர் மின்னணுவியல், பொருத்து ளர், அச்சு வார்ப்பவர் தொழில்நுட்பவியலாளர், கம்மியர் கருவிகள், கம்மியர் எந்திரம், மின்னணுவியல் தொழில்நுட்பவியலாளர், இயந்திர வேலையாள் கம்மியர் மோட்டார் வண்டி, கருவி மற்றும் அச்சு செய்பவர் மற்றும் கடைசலர் ஆகிய தொழிற்பிரிவுகளுக்கு ஆண், பெண் இருவரும் விண்ணப்பிக்கலாம்.
நேரடி மாணவர் சேர்க்கைக்கு மாணவர்க ளுக்கு உதவிடும் வகை யில், ஓசூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி காலத்தின் போது பயிற்சியாளர்களுக்கு மாதம்தோறும் ரூ.750 உதவித்தொகையாக வழங்கப்படும். இதை தவிர விலையில்லா பாடபுத்தகம், வரைபட கருவிகள், லேப்டாப் கம்ப்யூட்டர், சீருடை, மிதிவண்டி, பேருந்து பயண அட்டை, மூடுகாலணி ஆகியவை வழங்கப்படும். ஆண் பயிற்சியாளர்களுக்கு விடுதி வசதி உண்டு.
எனவே, தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் ஓசூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர்ந்து பயனடையலாம். மேலும் விவரங்களுக்கு துணை இயக்குனர்-முதல்வர், அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், ஓசூர் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ள ப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






