search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் மாநகராட்சி 1-வது மண்டல குழு கூட்டம்
    X

    கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

    ஓசூர் மாநகராட்சி 1-வது மண்டல குழு கூட்டம்

    • கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் தங்கள் குறைகளை கொட்டித் தீர்த்தனர்.
    • மின்வாரியத்திற்கு முறையாக மாதந்தோறும் தவறாமல் கட்டணம் செலுத்தி வரும் மாநகராட்சிகளில் ஓசூரும் ஒன்று என்று குறிப்பிட்டார்.

    ஓசூர்,

    ஓசூர் மாநகராட்சி 1-வது மண்டல குழு கூட்டம், நேற்று நடைபெற்றது. மாநகராட்சி கூட்டரங்கில் நடந்த இக்கூட்டத்திற்கு மண்டல தலைவர் அரசனட்டி ரவி தலைமை தாங்கினார். ஆணையாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

    இதில், குழு உறுப்பினர்கள் எம். அசோகா, எச். ஸ்ரீதரன், ரஜினிகாந்த், சீனிவாசலு, கிருஷ்ணப்பா, மாரக்கா, மம்தா ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் வார்டு பிரச்சினைகள் குறித்து பேசினார்கள்.

    கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

    சீனிவாசலு (தி.மு.க): 8-வது வார்டு கவுன்சிலர்: எனது வார்டுக்குட்பட்ட திருப்பதி நகரில் 50 மீட்டர் பைப்போட்டுத்தர 4 மாதமாக கேட்டு வருகிறேன்.நடவடிக்கையே இல்லை. சின்ன, சின்ன வேலைகளை முடித்து தரக்கூட மெத்தனம் காட்டப்படுகிறது. அடுத்த மண்டல கூட்டத்திற்கு முன்பு அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவேண்டும்.

    மாரக்கா: 11-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர்:

    பணிகள் எதுவும் நடைபெறாததால், வார்டு மக்களின் முகத்தில் முழிக்கவே முடியவில்லை". இவ்வாறாக கூட்டத்தில் குழு உறுப்பினர்கள் தங்கள் குறைகளை கொட்டித் தீர்த்தனர். தொடர்ந்து கூட்டத்தில் பேசிய ஆணையாளர் பாலசுப்பிரமணியன், "மாநகராட்சி பகுதிகளில் 439 பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஓசூர் மாநகராட்சிக்குட்ட அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான தெரு பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டிலேயே, குடிநீர் வாரியம் மற்றும் மின்வாரியத்திற்கு முறையாக மாதந்தோறும் தவறாமல் கட்டணம் செலுத்தி வரும் மாநகராட்சிகளில் ஓசூரும் ஒன்று என்று குறிப்பிட்டார்.

    மேலும், ஓசூரில் சாலைகள் மிகவும் மோசம் என்ற தோற்றம் உருவாகி வருகிறது, இதற்கு தனி கவனம் செலுத்தி உடனுக்குடன் சீரமைத்து குண்டும் குழியுமாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீர் விநியோகம் தொடர்பான பிரச்சினைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும், அவசரமான பணிகளை முடித்து தர வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    மேலும் இதில், நகர் நல அலுவலர் அஜிதா, நகரமைப்பு அலுவலர் சீனிவாசன், மற்றும் அலுவலர்கள் சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் வைக்கப்பட்ட 24 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

    Next Story
    ×