என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறிவுசார் குறையுடையோர் இல்லம் அமைக்க  விண்ணப்பம் வரவேற்பு
    X

    அறிவுசார் குறையுடையோர் இல்லம் அமைக்க விண்ணப்பம் வரவேற்பு

    • அறிவுசார் குறையுடையோர் இல்லம் அமைக்க சேலம் மாவட்டத்திற்கு ரூ.12.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் அறிவுசார் குறையுடையோர் இல்லம் அமைக்க மாற்றுத்திறனாளிகள் நலச்சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    2022 – 2023-ம்

    நிதியாண்டிற்கான மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மானியக் கோரிக்கையின் போது சேலம் மாவட்டத்தில் ரூ.12.50 லட்சம் செலவில் அறிவுசார் குறையுடையோர் இல்லம் அமைக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி அறிவுசார் குறையுடையோர் இல்லம் அமைக்க சேலம் மாவட்டத்திற்கு ரூ.12.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டத்தில் அறிவுசார் குறையுடை யோர் இல்லம் அமைக்க 40 நபர்கள் தங்கும் வசதியுடன் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மாற்றுத்தி றனாளிகள் நலச்சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வருகிற 14-ந்தேதிக்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், சேலம் என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×