பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் புனித தீர்த்தக்குட ஊர்வலம்

35-ம் ஆண்டு மஹா சிவ ராத்திரி திருவிழாவை முன்னிட்டு புனித தீர்த்தக்குடம் ஊர்வலம் நடைபெற்றது.தொடர்ந்து நேற்று காலை கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், நடந்தது.
ஊர்வலமாக தீர்த்த குடம் எடுத்து வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.
ஊர்வலமாக தீர்த்த குடம் எடுத்து வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.
Published on

பென்னாகரம்,

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் திருவள்ளுவர் நகர் பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் 35-ம் ஆண்டு மஹா சிவ ராத்திரி திருவிழாவை முன்னிட்டு புனித தீர்த்தக்குடம் ஊர்வலம் நடைபெற்றது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித தீர்த்தக்குடம் ஊர்வலம் பெண்ணாகரம் காவேரி ரோடு,கடைவீதி,பழைய பேருந்து நிலையம்,முள்ளுவாடி, புதிய பேருந்து நிலையம் வழியாக ஊர்வலமாக சென்று திருவள்ளுவர் நகரில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் நிறைவு பெற்றது.

தொடர்ந்து நேற்று காலை கொடியேற்றுதல் நிகழ்ச்சியும், இரவு மயான கொள்ளை பூஜையும் ,நாளை மறுநாள் திங்கட்கிழமை காலை அலகு குத்துதல் நிகழ்ச்சியும், தேரோட்டமும் நடக்க உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com