search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கிபெங்களூரை சேர்ந்த வாலிபர் பலி
    X

    ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கிபெங்களூரை சேர்ந்த வாலிபர் பலி

    • ஒகேனக்கலில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த இவர்கள் பின்னர் ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்தனர்.
    • அப்போது சிவப்பா ஆழமான பகுதியில் சென்றுள்ளதால் நீரில் முழ்கி இறந்தார்.

    ஒகேனக்கல்,

    கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள சாமுண்டீஸ்வரி லேஅவுட் பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பா (வயது 37). இவர் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். திருமணமான இவருக்கு நாகவேணி என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று சிவப்பா தனது நண்பர்கள் 4 பேருடன் காரில் ஒகேனக்கல் வந்துள்ளனர். ஒகேனக்கலில் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்த இவர்கள் பின்னர் ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்தனர்.

    அப்போது சிவப்பா ஆழமான பகுதியில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக சிவப்பாக ஆற்றில் மூழ்கியுள்ளார். அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

    உடனடியாக இவரது நண்பர்கள் ஒகேனக்கல் போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆற்றி மூழ்கி இறந்த சிவாப்பாவின் உடலை கைப்பற்றினர்.

    இதை பார்த்த நண்பர்கள் கதறி துடித்தனர்.மேலும் கைப்பற்றிய உடலை பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதேபோல் நேற்று முன்தினம் கோத்திகல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட பெங்களூரை சேர்ந்த கல்லூரி மாணவர் சேவியர் உடல் மணல் திட்டு பகுதியில் நேற்று மீட்கப்பட்டது.

    Next Story
    ×