search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டையில்  ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின் விளக்குகள்
    X

    செங்கோட்டையில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின் விளக்குகள்

    • செங்கோட்டை கேசி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உயர் கோபுர மின் விளக்குகளை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார்.

    செங்கோட்டை:

    செங்கோட்டை கேசி ரோடு, உலைத்திரடு, கேசி ரோடு முப்புடாதி அம்மன் கோவில் முன்பு, பம்ப் ஹவுஸ் ரோடு புதிய ரேசன்கடை அருகில், காந்தி ரோடு செல்வகணபதி பாத்திரக் கடை எதிர்புறம் ஆகிய பகுதிகளில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 10 மீட்டர் சிறிய உயர் கோபுர மின் விளக்குகளை, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தனுஷ்குமார் எம்.பி. தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமை தாங்கினார். செங்கோட்டை நகர செயலாளர் வக்கீல் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சண்முகராஜா வரவேற்று பேசினார். அதனைத் தொடா்ந்து தனுஷ்குமார் எம்.பி. உயர் கோபுர மின்விளக்கினை இயக்கி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகச்சாமி, தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், தென்காசி மேற்கு ஒன்றிய செயலாளர் திவான்ஒலி, தென்காசி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா, இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள், பேரூர் செயலாளர், மணிகண்டன், நகர்மன்ற உறுப்பினர் இசக்கித்துரைபாண்டியன் மற்றும் நகர, வார்டு பிரதிநிதிகள், ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உட்பட பலா் கலந்து கொண்டனா். வார்டு பிரதிநிதி சங்கர்கணேஷ் நன்றி கூறினார்.

    Next Story
    ×