search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் கடும் பனி மூட்டம்
    X

    நீலகிரியில் கடும் பனி மூட்டம்

    • பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது
    • கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் நிலவுகிறது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் வெயிலும், இரவில் லேசான மழையும் பெய்து வருகிறது. தொடர்ந்து இதமான காலநிலையே நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் நிலவுகிறது.

    ஊட்டி, குன்னூா் கோத்தகிரியில் கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சாலையில் ஊா்ந்து செல்லும் நிலைஏற்பட்டது. கடும் குளிா் மற்றும் பனி மூட்டம் காரணமாக பெரும்பாலான முக்கிய சாலைகளில் வாகனங்கள் குறைந்த அளவே காணப்பட்டன. காலை நேரத்தில் 16 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை காணப்பட்டது.

    காட்சிமுனைகளைக் காணமுடியாமல் சுற்றுலாப் பயணிகள் பனிமூட்டத்தை மட்டும் கண்டு செல்லும் சூழல் ஏற்பட்டது. அவ்வப்போது மழையும் பெய்து வருவதால் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துக் காணப்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×