என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலத்தில் இடி-மின்னலுடன் கன மழை
    X

    சேலத்தில் இடி-மின்னலுடன் கன மழை

    • நேற்றிரவு 1 மணி நேரத்திற்கு மேல் கன மழையாக கொட்டியது.
    • அதிக பட்சமாக ஓமலூரில் 38 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்தது. இதனால் பொது மக்கள் வெளியில் நடமாட முடியாமல் வீடுகளில் முடங்கினர். பின்னர் மாலையில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்த நிலையில் இரவு 9 மணியளவில் திடீரென வானில் கரு மேகங்கள் திரண்டன.

    பின்னர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி-மின்னலுடன் க ன மழை பெய்தது. குறிப்பாக ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு 1 மணி நேரத்திற்கு மேல் கன மழையாக கொட்டியது.

    இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் அந்த பகுதிகளில் தண்ணீர் காடாக காட்சி அளித்தது

    சேலம் மாநகரில் நேற்றிரவு 10 மணியளவில் திடீரென இடி, மின்னலுடன் கன மழை கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியதால் பொது மக்கள் நிம்மதியாக தூங்கினர்.

    ஏற்காட்டில் நேற்றிரவு 9 மணியளவில் தொடங்கிய மழை சுமார் அரை மணி நேரம் சாரல் மழையாக பெய்தது. இதனால் அங்கு இன்றும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருவதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் எங்கு பார்த்தாலும் பச்சை பசேலென காட்சி அளிக்கறது. மேலும் இந்த கோடை மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஓமலூரில் 38 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மேட்டூர் 26.2, சேலம் மாநகர் 10.6, ஏற்காடு 7.6, சங்ககிரி 4, எடப்பாடி 2.6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 89 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×