search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோகனூர் பகுதியில் கனமழைமின்கம்பங்கள் சாய்ந்ததால் 14 மணிநேர மக்கள் தவிப்பு
    X

    மோகனூர் பகுதியில் கனமழைமின்கம்பங்கள் சாய்ந்ததால் 14 மணிநேர மக்கள் தவிப்பு

    • தமிழகத்தில், வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்ப துடன், நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது.
    • சூறைக் காற்று காரண மாக, டிரான்ஸ்பர்மரின் ஒரு பகுதி வெடித்து சிதறியது.

    நாமக்கல்:

    தமிழகத்தில், வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்ப துடன், நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருகிறது. அதன் காரணமாக, சிறுவர்கள் முதல், முதிய வர்கள் வரை, அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு, மேற்கு திசை காற்று சந்திப்பு காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மழைக்கு வாய்ப்பு உள்ளது என, வானிலை மையம் எச்சரித்துள்ளது. கடந்த 2 நாட்களாக, நாமக்கல் மாவட்டத்தில், இதுவரை அதிக பட்சமாக, 104 டிகிரி வெப்பம் எட்டியுள்ளது. இது, 109 டிகிரி வரை அதிகரிக்கும் என, வானிலை மையம் அறிவித்துள்ளது.

    அதனால், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ள னர். இந்நிலையில், மாவட்டத்தின் ஒரு சில பகு திகளில், லேசான மற்றும் சூறை காற்றுடன் கனமழை பெய்தது. மோகனூர் பகுதியில், பலத்த சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. ஒரு மணி நேரம் நீடித்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது.

    சூறைக் காற்று காரண மாக, டிரான்ஸ்பர்மரின் ஒரு பகுதி வெடித்து சிதறியது. அதேபோல், ஆரியூர், மாரப்பனூர் மற்றும் மணியங்காளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், 6 மின் கம்பங்கள் முறிந்து விழுந்தது. அதன் காரண மாக, எஸ்.வாழவந்தி துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட, மோகனூர், பேட்டப்பா ளையம், கொளத்தூர், ஆரியூர், வளை யப்பட்டி, கிடாரம் உள்ளிட்ட பகுதி களில் மின்சாரம் துண்டிக்கப் பட்டது. தொடர்ந்து, மின்வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு சரி செய்து, மீண்டும் மின் இணைப்பு வழங்கினர். இரவு நேரத்தில், 10 முதல், 14 மணிநேரம் வரை தொடர்ந்து மின்தடை ஏற்பட்டதால், கிராம மக்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர்.

    மாவட்டத்தில் பதிவான மழை அளவு (மில்லி மீட்ட ரில்): எருமப்பட்டி, 1, மங்களபுரம் 10.80, மோக னூர் 56, திருச்செங்கோடு 1, கலெக்டர் ஆபீஸ் 1, கொல்லி மலை 4, என மொத்தம் 73.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. கோடை வெப்பத்தை தனிப்பதற்காக பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×