என் மலர்
உள்ளூர் செய்திகள்

பழவேற்காட்டில் மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி
- பழவேற்காடு குளத்து மேடு பகுதியில் பழங்குடி கிராம மக்கள் வசித்து வருகின்றனர்.
- திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க.வினர் காய்கறி, அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பழவேற்காடு குளத்து மேடு பகுதியில் பழங்குடி கிராம மக்கள் வசித்து வருகின்றனர். தற்போது பெய்த கன மழை காரணமாக அப்பகுதி முழுவதும் மழை நீர் சூழ்ந்து குடிசைகளுக்குள் புகுந்ததால் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பா.ஜ.க.வினர் காய்கறி, அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் சக்கரவர்த்தி, மாநில மீனவர் அணி தலைவர் முனுசாமி, அரசு தொடர்பு துறை தலைவர் பாஸ்கர், கே.ஆர்.வி.வெங்கடேசன், பொதுச் செயலாளர் அன்பாலையா சிவக்குமார், மாவட்ட தலைவர் செந்தில் கலந்து கொண்டனர்.
Next Story






