search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுகாதாரத்துறையினர் ஆர்ப்பாட்டம்
    X

    மயிலாடுதுறையில், பொது சுகாதாரத்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுகாதாரத்துறையினர் ஆர்ப்பாட்டம்

    • என்.எ.எஸ்., பி.ஹெச்.எஸ். ஆகிய அனைத்து பதவிகளுக்குமான காலி ப்பணியிடங்களை பணிமூப்பில் குழப்பம் ஏற்படுத்தியது.
    • பாராபட்சமாக ஒரே நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் இரட்டை நிலைபாடு.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நலத்துக்கு டியில் உள்ள துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் முன்பு பொது சுகாதாரத்துறை அலுவலக சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் ஆர். பாஸ்கர் தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாவட்ட பொருளாளர் இராம்மோகன், மாநில பொதுக் குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், மாவட்ட பொருளாளர் தவபாஸ்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் செந்தில் வரவேற்றார்.

    மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் கண்டன உரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் 7.11.2008 அன்று ஒருங்கிணை க்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்களாக பணிபுரிந்துவந்த அனைவருக்கும் முன்தேதி யிட்டு பதவி நிலையில் நடைமுறை ப்படுத்தாமல் பதவி உயர்வு க்கான தேர்ந்த பட்டியலை திருத்தி வெளியிடும்போது, தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும், என்.எ.எஸ்., பி.ஹெச்.எஸ். ஆகிய அனைத்து பதவிகளுக்குமான காலி ப்பணியிடங்களை பின்பற்றாமல் மேலோட்ட மாக திருத்திய தேர்ந்த பட்டியலை வெளியிட்டு பணிமூப்பில் குழப்பம் ஏற்படுத்தியதை கண்டித்தும். எம்.டி.எம். சுகாதார ஆய்வாளர்களது ஊதியத்தை ரூ 20000 என உயர்த்தி வழங்கக் கோரியும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டே அரசு ஆணைப்படி 267 -ன் படி 216 பேர் சுகாதார உதவியாளராக ஆக பணிபுரிந்து 1995-ல் சுகாதார ஆய்வாளர் நிலை 1 ஆக பதவி உயர்வு பெற்ற நபர்களுக்கு கடந்த.2016 முதல் பணியில் இளைய நபருக்கு பதவி உயர்வு வழங்கிய அதே தேதியில் பதவி உயர்வு மற்றும் இதர பலன்களை வழங்கியதைப் போன்று வழங்காமல், பாரபட்சமாக ஒரே நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் இரட்டை நிலைபாடு மேற்கொண்டதை கண்டித்தும் பணியில் உள்ள அனைவருக்கும் பணி மூப்பு அடிப்படையில் ஹெச்.இ. பி.ஏ.பணியிடங்களுக்கான கவுன்சிலிங் நடத்த ஜியோ வலியுறுத்தியும் இக்கலந்தாய்வு முடிவடைந்த உடன் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 1 பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிட வலியுறுத்தியும் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தப்பட்டது.முடிவில் மாவட்ட பொருளாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

    Next Story
    ×