என் மலர்
உள்ளூர் செய்திகள்

இரவு தாமதமாக வந்தார்: தாய் கண்டித்ததால் விஷம் குடித்து மகள் சாவு
- தாய் கண்டித்ததால் விஷம் குடித்து மகள் தற்கொலை செய்த பரிதாபம்.
- இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ஓசூர்,
ஓசூர் கீழ் கொல்லர் தெருவை சேர்ந்த முரளி என்பவரது மனைவி சித்ரா (28). இவர் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
கடந்த 7-ந் தேதி, சித்ரா வேலையை முடித்து, இரவு தாமதமாக வீட்டு வந்தாராம். இதனை அவரது தாயார் கலா கண்டித்து கேட்டுள்ளார்.
இதனால் வேதனையடைந்த சித்ரா, விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இது குறித்து ஓசூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Next Story






