என் மலர்
உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் நாளை நடக்கிறது தனியார் வேலைவாய்ப்பு முகாம்
- வேலைவாய்ப்பு பெறுப வர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவுரத்து செய்யப்படமாட்டாது.
- அனைத்துவித கல்வித் தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்த்துறை நிறுவனங்கள் தெரி வித்துள்ளன.
தருமபுரி,
தனியார் துறை நிறுவனங்களும் தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள மனுதாரர்களும் கலந்துக்கொள்ளும் "தனி யார்துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை 25-ந்தேதி தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது.
எனவே, தனியார்துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை நேரடியாக தேர்வு செய்து கொள்ளலாம். இது ஒரு இலவசப்பணியே ஆகும்.
இதன் மூலம் தனியார்துறையில் வேலைவாய்ப்பு பெறுப வர்களுக்கு அவர்களது வேலைவாய்ப்பு பதிவுரத்து செய்யப்படமாட்டாது.அரசுத் துறைகளில் அவர்களது பதிவு மூப்பின்படி நேர்முகத் தேர்வு அனுப்பப்படும். எனவே, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள் தனியார்துறையில் வேலைக்கு சென்றால் அவர்களது பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
இம்முகாமில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு விற்பனை யாளர், மார்க்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவ், சூப்பர்வைசர், மேலாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், தட்டச்சர், அக்கவுண்டன்ட், கேசியர், மெக்கானிக், போன்ற பணி
களுக்கு தேர்வு செய்ய உள்ளனர்.
டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் பள்ளிப்படிப்பு முடித்த ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட அனைத்துவித கல்வித் தகுதிக்கும் ஆட்கள் தேவை என தனியார்த்துறை நிறுவனங்கள் தெரி வித்துள்ளன.
ஆகவே மேற்படி பணிகளுக்கு தகுதியும், விருப்பம் உள்ள நபர்கள் அனைவரும் நாளை 25-ந்தேதி வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்துக் கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது தவிர இதர கல்வித் தகுதிகள் உடையோரும் தகுந்த பணியிடங்களுக்கு பரிசிலீக்கப்படுவர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.






