என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கயிற்றால் கட்டி வைத்து கையை அடித்து உடைத்த கந்து வட்டி கும்பல்- கலெக்டரிடம் பரபரப்பு புகார்
- கந்து வட்டி கும்பல் என் கணவரிடம் பணம் கேட்டு அவர்கள் வீட்டிற்கு இழுத்துச் சென்று கை, கால்களை கயிற்றால் கட்டி அடித்துள்ளனர்.
- இடது கையை அடித்து உடைத்து விட்டார்கள்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோட்டப்பட்டி அண்ணா நகர் பகுதியில் சேர்ந்தவர் வேடி. இவரது மனைவி மல்லிகா. இவர் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள கந்துவட்டிக்காரரிடம் கடந்த 2011-ல் கவுன்சிலர் தேர்தலுக்காக ரூ.40 ஆயிரம் கடன் வாங்கினேன். 10 ஆயிரம் உடனே திருப்பி கொடுத்து விட்டேன். மீதி பணத்தை 1 லட்சம் ரூபாய் சீட்டு போட்டு முப்பது ஆயிரத்தை கொடுத்து விட்டேன். பிறகு கடந்த 4-ம் தேதி கந்து வட்டி கும்பல் என் கணவரிடம் பணம் கேட்டு அவர்கள் வீட்டிற்கு இழுத்துச் சென்று என் கை, கால்களை கயிற்றால் கட்டி அடித்து பலத்த காயத்தை ஏற்படுத்தினர்.
இடது கையை அடித்து உடைத்து விட்டார்கள். அப்போது நான் அலறிய சத்தத்தால் விட்டு விட்டனர். நான் எங்கள் உறவினர்களிடம் சென்று சொல்லியபோது சிகிச்சைக்காக என் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவர்கள் கூறும்போது கை உடைந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை அடுத்து கோட்டப்பட்டி போலீசில் ஊர் மக்கள் சாட்சியோடு மனு கொடுத்தோம். மேலும் இந்த கந்து வட்டி கும்பலால் எங்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வருகிறது எங்களுக்கு பாதுகாப்பு வேண்டுமென கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்