search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று முதல் திறப்பு
    X

    அரையாண்டு விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. உற்சாகமாக பள்ளிக்கு பறப்பட்டு சென்ற மாணவிகள். இடம் : தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி.

    அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று முதல் திறப்பு

    • 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டது.
    • விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

    தருமபுரி,

    தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 1 முதல் பிளஸ் -2 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டு மற்றும் இரண்டாம் பருவ தேர்வு கடந்த டிசம்பர் 16-ம் தேதி தொடங்கி மாவட்ட அளவில் நடைபெற்றது.

    தேர்வுகள் முடிந்த நிலையில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் 24-ம் தேதி முதல் நேற்று வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை வழங்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்றுடன் விடுமுறை முடிவடைந்த நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன.

    இதையடுத்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கு உற்சாகமாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

    பள்ளிகள் திறக்கப் பட்டு வகுப்புகள் வழக்கம் போல் நடைபெற்றது.

    1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வரும் 5-ம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்படுகின்றன.

    Next Story
    ×